தமிழ் இலக்கியமோ எழுத்தாளர்களோ சரியான விதத்தில் கௌரவிக்கப்படுவதில்லை
என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. பத்திரிகை மற்றும்
பதிப்புத்துறையில் பெரும்பாலும் புது எழுத்தாளர்களுக்குத் தகுந்த
சன்மானம் கிடைப்பதில்லை. இந்தக் குற்றத்தில் நம்மனைவருக்கும் பங்குண்டு.
இந்தக் குறையை சிறிதேனும் நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்தப் புதிய வசதி
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் விரும்பும் எழுத்தாளரைப் பல விதங்களில் ஊக்குவிக்கலாம்.
1) அவர் எழுதும் பகுதியில் குறைந்த விலையில் விளம்பரம் செய்யலாம் அல்லது
பணம் செலுத்தி ஆதரவளிக்கலாம். இதன் மூலம் அந்த எழுத்தாளர் சன்மானம் பெற
உதவுவதோடு அதனால் அவர் இன்னும் அதிகப் படைப்புகளைத் தரவும் நிலாச்சாரல்
மென்மேலும் புதிய பகுதிகளைப் புகுத்தவும் ஊக்குவிப்பீர்கள். (விபரம்)
very Nice website especially the religious weekly edition of= Sought Clarifies- By Sri Siva Shankara Baba which is very informative and enlightening to us all under the Faith section Hats off for this excellent work